ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாளை சில மாநிலங்களில் இடியுடன் கூடிய அடைமழை- வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

கோலாலம்பூர், டிச 24- நாளை கிறிஸ்துமஸ் தினத்தன்று  கிளந்தான், திரங்கானு, பகாங் போன்ற கிழக்கு கரை மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய அடை மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற வானிலை நிலவும் என்று அத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அதோடு மட்டுமின்றி, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சரவா சபா, லபுவான்  ஆகிய மாநிலங்களின் ஓரிரு பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்யும சாத்தியம் உள்ளதாகவும் அத்துறை தெரிவித்தது.

நாளை இரவு சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சவரா, சபா, லபுவானின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :