கோலாலம்பூர், டிச 26 - நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ள வேளையில் மேலும் ஐவரைக் காணவில்லை என்று போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது. சிலாங்கூரில் 25 பேரும் பகாங்கில் 19 பேரும் கிளந்தானில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார். சிலாங்கூரில் 17 ஆண்கள் மற்றும் எட்டு பெண்கள், பகாங்கில் 13 ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் அவர் தெரிவித்தார்.