கோலாலம்பூர், ஜன 10- நாட்டின் மக்கள் தொகையில் 78.5 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 56 லட்சத்து 47 ஆயிரத்து 708 பேர் நேற்று வரை தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். அதே சமயம், 23.9 விழுக்க்காட்டினர் அல்லது 78 லட்சத்து 9 ஆயிரத்து 058 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களில் 2 கோடியே 28 லட்சத்து 81 ஆயிரத்து 770 பேர் பெரியவர்கள் என்றும் 27 லட்சத்து 5 ஆயிரத்து 938 பேர் இளையோர் என்றும் சுகாதார அமைச்சின் கோவிட்நாக் அகப்பக்கம் கூறியது.
இதனிடையே, நேற்று 110,258 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 910 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,500 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 107,848 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.