ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

எல்மினா  குடியிருப்பு பகுதியில்  கடந்தாண்டு முதல் 21 தெருநாய்கள் பிடிபட்டன

ஷா ஆலம், ஜன 27- இங்குள்ள எல்மினா கார்டன் குடியிருப்பு பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சுற்றித் திரிந்த 21 தெரு நாய்களை ஷா ஆலம் மாநகர் மன்றம்  பிடித்தது.

கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 15 நாய்களும் இம்மாதம் 6 நாய்களும் பிடிக்கப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுத் துறை தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சுற்றுச்சூழல் சுகாதாரப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகளில் இந்த நாய்கள் பிடிபட்டதாக அவர் சொன்னார்.

இது தவிர, காக்கைகளால் ஏற்படும் தொந்தரவு மற்றும் கட்டுமானக் குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் நடவடிக்கை ஆகியவற்றை களைவதற்கான நடவடிக்கைகளை மாநகர் மன்றம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட நில வடிவமைப்பினால் வாகனமோட்டிகளால் சாலையை முழுமையாக பார்க்க முடியாத சூழல் ஏற்படுவதாக எழுந்த பிரச்சனை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனமான சைம் டார்பியின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :