ஷா ஆலம், ஜன 28- மாநகரின் பல பகுதிகளில் நேற்று பெய்த புயலுடன் கூடிய கனத்த மழையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஷா ஆலம் மாநகர் மன்றம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜாலான் சுபாங், செக்சன் யு1, மெலாவத்தி சுற்றுவட்டம், ஜாலான் ஜூப்ளி பேராக், செக்சன் 22 ஆகிய பகுதிளில் இந்த துப்புரவுப் பணியை மாநகர் மன்றத்தின் அமலாக்க பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை முதல் இப்பணி மேற்கொள்ளப்படுவதாக மாநகர் மன்றத்தின் முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/01/bomba-2-960x720.jpg)