ECONOMYSELANGOR

சம்மன்களுக்கு 50 விழுக்காடு கழிவு- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் வழங்குகிறது

ஷா ஆலம், மே 27- வரும்  ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி சம்மன்களுக்கு 50 விழுக்காட்டு கழிவை வழங்க கோல சிலாங்கூர் நகராண்மை கழகம் முன்வந்துள்ளது.
வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கும் இந்த சலுகை காலத்தில் நகராண்மைக் கழக அதிகார வரம்பிற்குட்பட்ட குற்றப்பதிவுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்று அந்த ஊராட்சி மன்றம் தெரிவித்தது.

பல்வேறு குற்றங்களுக்காக வழங்கப்பட்ட குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை பொது மக்கள் விரைந்து செலுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நகராண்மைக் கழகம் பேஸ்புக் வழி வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை  இணையத் தள செயலிகள் வாயிலாகவும் செலுத்தலாம் என அது தெரிவித்தது.

இது தவிர திங்கள் தொடங்கி வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் நகராண்மை கழகத்தின் தலைமையகத்தில் உள்ள முகப்பிடங்களிலும் டிரைவ் த்ரூ எனப்படும் வாகன முகப்பிடங்களிலும்  அபராதத்தை செலுத்த முடியும்.

மேல் விபரங்களுக்கு கோல சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் சட்டப் பிரிவை 03-32897385 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :