ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

ஜெலாஜா சிலாங்கூர் இலவச மருத்துவ முகாம் மட்டுமின்றி ஒரு பன்முக நிகழ்ச்சி இந்தியர்கள் அதில் பங்கு கொண்டு பயனடைய வேண்டும்

மோரிப் ஜூன்   27- கடந்த  சனிக்கிழமை கோல லங்காட் மாவட்ட ஜெலாஜா சிலாங்கூர் மோரிப் கடற்கரையில் வெகு சிறப்பாக பல விளையாட்டு நிகழ்வுகள், அதிர்ஷ்ட குலுக்கல்  அறிவில் ,விவசாய கண்காட்சி களுடன், மருத்துவ முகாம் மற்றும் மாநில அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் பற்பல சேவைகளின் முகப்பிடங்களும் திறக்கப்பட்டு இருந்தன.

சிலாங்கூர் மக்கள் தேவைப்படும் சேவைகளை எப்படி பெறுவது, என்பது  குறித்து விளக்கங்களுடன்,  தேவைபடுவோருக்கு உடனடியான சேவைகளும் வழங்கப் பட்டது. பல நூறு வெள்ளிகள் மதிப்புள்ள ஒரு முழு மருத்துவ பரிசோதனையை வருகையாளர்களுக்கு இலவசமாக வழங்கியது.

அதில் கலந்து கொண்ட ஒரு பயனிட்டாளரான  திரு.பரம் அவர்கள்,  தனது மனைவி பெயருக்கு வந்த ஒரு கடிதத்தின் விவரம் அறிய அங்கு வந்ததாகவும், அங்கு வந்த தான் இந்த மருத்துவ முகாம் குறித்து அறிந்து கொண்டதுடன், தானும் சில பரிசோதனைகள் செய்து கொண்டதாகவும் கூறினார்.

தனது பார்வை குறைபாடு குறித்து பரிசோதித்து அதன் குறைபாடுகளுக்கான காரணத்தை அறிந்து கொண்டதாகவும். மாநில அரசின் இம்முயற்சியை பாராட்டுவதாகவும், ஆனால்  இந்நிகழ்வு குறித்து பொது மக்கள், குறிப்பாக இந்தியர்கள் அதிகம் கலந்து கொள்ளாதது குறித்து தனது ஏமாற்றத்தை தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் திரண்டு வர, இது போன்ற நிகழ்வுகளை மக்களிடம் விளம்பர படுத்த வேண்டும் என்றார் அவர்.

இந்தியர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இது ஒரு உத்தமமான சேவை, பலர் நோய் தீவிரம் அடைந்தபின் பல ஆயிரங்களை செலவழித்தும் குணமடையாமல் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

உடல் ஆரோக்கியம் மீது நாம் அனைவரும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் .அதனால் இது போன்ற இலவச மருத்துவ பரிசோதனைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் 74 வயது திரு. பரம்..


Pengarang :