ஷா ஆலம், செப் 9 அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக ஏற்பாட்டில் நாளை நடைபெறும் வாகனமில்லா தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள்களை இலவசமாக பரிசோதனை செய்யும் சேவை வழங்கப் படுகிறது.
மேலும், இந்த நிகழ்வையொட்டி இலவச முடிதிருத்தும் சேவை, கராவோக்கே சிறார்கள் பொழுதுபோக்கு நிகழ்வு மற்றும் டோயோட்டா கண்காட்சி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். இந்த வாகனமில்லா தின நிகழ்வை சிறப்பிக்க திரண்டு வாருங்கள் என நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த நிகழ்வு பண்டான் இண்டா, எம்.பி.ஏ.ஜே. திடலில் அதிகாலை 6.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் இந்த வாகனமில்லா தின நிகழ்வு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை நடைபெறும்.