ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 2,431ஆக உயர்வு

ஷா ஆலம், செப் 15– நாட்டில்  கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  மறுபடியும் இரண்டாயிரத்தை தாண்டியது.

நேற்று மொத்தம் 2,431 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் எட்டு சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்து 296 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்த ஐந்து நாட்களாக சற்று தணிந்து இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்தது.


Pengarang :