ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களில் இன்று பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஷா ஆலம், டிச 21: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களில் இன்று பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) கணித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகும்.

பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலைதான் கணிக்கப்பட்டுள்ளது.

துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தை நாடவும் அல்லது myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.

இதற்கிடையில், கம்போங் சுங்கை செலிசெக்கில் உள்ள பெர்ணம் நதியும் எச்சரிக்கை அளவைத் தாண்டி விட்டதாக தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.


Pengarang :