EVENT

ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 15 வழிபாட்டுத் தலங்கள் வெ.255,000 மானியம் பெற்றன

ஷா ஆலம், பிப் 12– இங்குள்ள தாமான் ஸ்ரீமூடா, ஸ்ரீ சுவர்ண ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற மாநில நிலையிலான பொங்கல் விழாவின் போது கிள்ளான்/ஷா ஆலம் வட்டாரத்திலுள்ள 15 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு 255,000 வெள்ளி வழங்கப்பட்டது.

இந்த மானியத்திற்கான காசோலைகளை சமூக பொருளாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார். இது, இவ்வாண்டிற்கான இரண்டாம் கட்ட நிதியளிப்பு நிகழ்வாக விளங்குகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த வாரம் பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெற்ற மாநில நிலையிலான தைப்பூச நிகழ்வின் போது 45 ஆலயங்களுக்கு 650,000 வெள்ளி வழங்கப்பட்டதாக சமூகவியல் பொருளாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.


Pengarang :