HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 160 பேர் பாதிப்பு –மரணச் சம்பவம் பதிவாகவில்லை

ஷா ஆலம், பிப் 13- நாட்டில் நேற்று 160 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் ஒன்று வெளிநாட்டிலிருந்து வந்தவரிடமிருந்து கண்டறியப்பட்டது.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகவில்லை. இந்நோய்க்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 36,951ஆக இருந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி மொத்த 9,401 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் 96.5 விழுக்காட்டினர் அல்லது 9,068 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஒன்பது பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில நால்வருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று 358 பேர் கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 93 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :