HEALTHNATIONAL

கோவிட்-19 நோய் தொற்றினால் நேற்று 184 பேர் பாதிப்பு

ஷா ஆலம், பிப் 22- நாடு முழுவதும் நேற்று 184 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் மூன்று வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இந்நோய்த் தொற்றினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்ந்து 36,957 ஆக உள்ளது. நேற்றைய நிலவரப்படி கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தைக்
கொண்டவர்கள் எண்ணிக்கை 9,322ஆக இருந்தது. அவர்களில் 8,986 பேர் அல்லது 96.4 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 328 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் எட்டு பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். அவர்களில் அறுவருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 192 பேர் குணமடைந்த வேளையில் இத்தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 95 ஆயிரத்து 079ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :