ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஏழு மாவட்டங்களில் இன்று மாலை வரை மழை பெய்யும்

ஷா ஆலம், டிச.9- சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோம்பாக், கோல லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய ஏழு மாவட்டங்களில் மாலை  வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா மற்றும் பேராக், பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர் சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு   அல்லது அதற்கும்  மேலாக 20 மில்லிமீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படும் போது இந்த  எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஒரு  ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக்கூடிய குறுகிய கால எச்சரிக்கையாகும்.

வானிலை தொடர்பான   சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம் அல்லது சமூக ஊடகங்களைப் பார்வையிடலாம்.


Pengarang :