Dato’ Seri Amirudin Shari berucap sempena Majlis Graduasi Qurra’ Maahad Integrasi Tahfiz Negeri Selangor kali ke-7 di Dewan Jubli Perak, Shah Alam pada 13 Mac 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENT

அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் புத்தாண்டுச் சிறப்புச் செய்தியை 15ஆம் தேதி வழங்குவார்

ஷா ஆலம்,  ஜன 12- மந்திரி  புசார் தனது புத்தாண்டு 2024ஆம் ஆண்டிற்கான சிறப்பு செய்தியை வரும்  திங்கட்கிழமை மாநிலத்தின் அதிகாரப்பூர்வ நிர்வாக மையத்திலுள்ள  ஜூப்லி பேராக்  ஆடிட்டோரியத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்க உள்ளார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அந்த சிறப்பு உரை காலை 8.00 மணி தொடங்கி அவரின் சிறப்பு முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படும்.  மீடியா சிலாங்கூர் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவியிலும் அதனைக் காணலாம்.

சிலாங்கூர் கினி, சிலாங்கூர் ஜெர்னல், மாண்டரின் மற்றும் தமிழ் பதிப்புகளிலும் அவரது உரையின் உள்ளடக்கங்கள் விரிவாக வெளியிடப்படும்.


Pengarang :