NATIONAL

தேசிய பத்திரிக்கையாளர் டத்தோ அகமட் ரெஜால் இன்று காலமானார்

கோலாலம்பூர், மார்ச் 29: தேசிய பத்திரிக்கையாளர் (தொகோ 2014) டத்தோ அகமட் ரெஜால் அர்பி இன்று அதிகாலை காலமானார்.

இந்த செய்தியை அவரின் மனைவி டத்தின் நோரைனி ஷெரீப்பின் உறுதி செய்துள்ளார்.

“எனது கணவர் அஹ்மட் ரெஜல் அர்பீ அதிகாலை 2 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்” என்று அவர் இன்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும், 84 வயதான அஹ்மட் ரெஜால், தேசிய செய்தி அமைப்பின் (பெர்னாமா) முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் பெரித்தா ஹரியான் குழுமத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார்.

அவர் 1969 ஆம் ஆண்டு முதல் மூத்த நிருபராப் பெர்னாமாவில் பணியாற்றத் தொடங்கினார். பின் 1973 யில் அச்செய்தி நிருவனத்தின் முதல் வெளிநாட்டு நிருபராகவும் பணியாற்றினார்.

– பெர்னாமா


Pengarang :