ஈப்போ, ஏப் 18: முதியவர் ஒருவர் (91), கிந்தா ஹைட் பிளாட்டின் 13வது மாடியிலிருந்து விழுந்து இறந்தார்.

குடியிருப்பின் பின்புற சந்தில் அம் முதியவரின் சடலம் காவலாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப் பட்டதாகவும், சம்பவம் குறித்து காலை 8.20 மணிக்குக் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் அபாங் சைனால் அபிடின் அபாங் அஹமட் கூறினார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்புகளை மேலும் ஆய்வு செய்ததில் குற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காவல்துறை காத்திருப்பதாகவும் அபாங் சைனல் கூறினார்.

“இந்த வழக்கு தொடர்பாகத் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி உதவி கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) முகமட் சஹ்ரான் டெர்மிசியை 019-4444515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக் கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா