SELANGOR

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவீர்!

மோரிப், ஏப்.22-

பல்வேறு நோய்களுக்கு ஆளாகாமல் இருக்க, ஆரம்பம் முதலே நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

மக்களின் தற்கால வாழ்க்கை முறை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக சுகாதாரம், சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக்கான ஆட்சி குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்முட் தெரிவித்தார்.

ஆரோக்கிய வாழ்க்கை முறை குறித்து பலரிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள போதிலும் இன்னும் சிலர் இதற்கு முக்கியத்துவம் அளிக்க மறுத்து வருகின்றனர் என்றார் அவர்.

“60 வயது வரை காத்திருந்து உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் இந்தியர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படவில்லை. சீனர்களில் பலர் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்வு செய்யத் தொடங்கிவிட்டனர்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :