MEDIA STATEMENTPBT

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக இந்து பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு

ஷா ஆலம், அக் 30- அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 36 இந்து பணியாளர்களுக்கு உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அன்பளிப்பு வழங்கியது.

நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று நடத்தப்பட்ட 2021 தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் அந்த பணியாளர்களுக்கு தீபாவளி முன்னேற்பாடுகளைக்  கவனிப்பதற்கு ஏதுவாக அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டதாக நகராண்மைக் கழகம் கூறியது.

நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது இந்நிகழ்வில் கலந்து கொண்டு பணியாளர்களுடன் அளவளாவியதோடு அவர்களுக்கு பரிசு பொருள்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்களான எ.கனகராஜா, எஸ். முரளி, எல். கமலேசராவ், ஏ. துரை, எஸ்.சின்னையா, ஜே. மரினா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :