கோலாலம்பூர், டிச 26 - நாட்டில் கோவிட் -19 சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. நேற்று முன்தினம் 3,528 ஆக இருந்த நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 3,160 ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தொடர்ந்து ஆறாவது நாளாக நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் தினசரி எண்ணிக்கை நான்காயித்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 38 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பதிவான சம்பவங்களில் 3,004 உள்ளூர் பரவிய வேளையில் எஞ்சிய 156 சம்பவங்கள் வெளிநாட்டனர் சம்பந்தப்பட்டவையாகும். மொத்தம் 3,094 சம்பவங்கள் அல்லது 97.9 விழுக்காடு ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் 66 சம்பவங்கள் அல்லது 2.1 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளன. நேற்று 4,421 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 வட்சத்து 61 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2021/09/Selvax-bergerak012-960x605.jpg)