கிள்ளான் ஜன 16 ;- கிள்ளான் ஶ்ரீ செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் எற்பாட்டில் ஶ்ரீ செந்தோசா ஶ்ரீ காளிகாம்பிகை ஆலய நிர்வாகம் மற்றும் கெஅடிலான் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் பொங்கல் விழாவை இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10,00 மணிக்கு மேற்படி ஆலய வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடினார்கள்.
இந்த பொங்கல் விழாவில் சுற்றுவட்டார பெண்கள் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து மகிழ்ந்ததுடன் , பல பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.
இந்த நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பொங்கல் கொண்டாடும் இந்தியர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளையும் , தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் ஶ்ரீ செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துக் கொண்டார்