கோலாலம்பூர், ஆகஸ்ட் 9: 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நாட்டின் ஏழாவது தங்கப் பதக்கத்தை நேற்று வென்ற தேசிய மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் அணியான பேர்லி தான்-எம். தீனா ஜோடிக்கு பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மாமன்னர் தம்பதியர் இன்று இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் வழியாக தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தேசிய கண்காட்சி மையத்தில் (என்இசி) நடந்த இறுதிப் போட்டியில் இந்த இரட்டையர் அணி இங்கிலாந்தின் க்ளோ பிர்ச்-லாரன், ஸ்மித்தை 21-5, 21-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்ததன் மூலம் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளில் தங்கப் பதக்கம் வெற்றி பெற்றது.
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மலேசியா ஏழு தங்கம், எட்டு வெள்ளி மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை வென்று தனது இலக்கை நிறைவு செய்தது.