SELANGOR

ஜூலை 14: நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு திரண்டு வாருங்கள்

ஷா ஆலம், ஜூலை 11:

சிலாங்கூர் மாநில தலைவர்களின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு எதிர் வரும் ஜூலை 14-இல் நடக்க இருப்பதால், அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

கோம்பாக் நாடாளுமன்றம் மற்றும் பத்து கேவ்ஸ் சட்ட மன்றமும் சேர்ந்து பத்து கேவ்ஸ் திடலில் இரவு 8 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பல்வகை உணவுகள் பொது மக்களுக்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. கோழி ரெண்டாங், லெமாங், நாசி கோரேங்,மீ கறி, ரோஜாக், சென்டோல், பலகாரங்கள் மற்றும் உள்நாட்டு பழங்கள் போன்றவை பொது மக்களுக்கு பரிமாறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் தலைவர்களோடு கலந்து கொண்டு உரையாடி மகிழும் வாய்ப்பு உள்ளது. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், ஆட்சி குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிலாங்கூர் மாநில தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :