NATIONAL

பாக்காத்தானின் நேர்மையான அரசியல் பண்பாடு,புதிய மலேசியாவை உருவாக்கும்

பகாங், நவம்பர் 19:

 

நேர்மையான அரசியல் சித்தாந்தங்களை மற்றும் திறன்மிக்க நிர்வாகத்தை கொண்ட பாக்காத்தான் அரசாங்கம் தொடர்ந்து புதிய மலேசியாவை உருவாக்கும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். ஊழலற்ற நிர்வாகம் மற்றும் வெளிப்படையான கொள்கைகளை கொண்டு செயல்படும் பாக்காத்தான் இந்த முயற்சியில் வெற்றி பெற முடியும் என உறுதியாக கூறினார்.

” இஸ்லாமிய கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல், மலாய்காரர்கள் மற்றும் மற்ற இனத்தவர்கள் அனைவரையும் பாதுகாப்போம் என்று உறுதி கூறுகிறேன். நான் அவதூறுகளை பரப்புவதில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக மக்களின் நல்வாழ்வுக்கு பாக்காத்தான் தலைவர்கள் உழைக்கிறார்கள்,” என்று சிம்பாங் கெப்பாயாங், பெராவில் நடந்த கெஅடிலான் கட்சியின் ‘மக்களின் மீது அக்கறை, சூறாவளி பயணம்’ எனும் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீரத் தமிழன்


Pengarang :