ஷா ஆலம், மே 27:
ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) ஒவ்வொரு நோன்பு மாதம் தொடங்கும் போது ஊடகங்களை கௌரவிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தகவல் ஊடகங்களின் சேவை பாராட்டும் விழாவை ஏற்பாடு செய்தது. ஷா ஆலம் மேயர் டத்தோ அமாட் மஸ்லான் ஜஹரின் கூறுகையில், பாராட்டு விழா ஏற்பாடு செய்த நோக்கம் தகவல் ஊடகங்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்கு நன்றி செலுத்தவேண்டும் என்ற எண்ணமே ஆகும்.
மேலும் பேசுகையில் அவர், இந்த நிகழ்வு தொடர்ந்து எம்பிஎஸ்ஏ மற்றும் தகவல் ஊடகங்களிடையே நல்ல ஒரு புரிந்துணர்வு இருக்கும் என்ற நிலையில் பெரிய அளவில் நன்மை களையும் பெற்று தருகிறது என்று விவரித்தார்.
” எம்பிஎஸ்ஏ தகவல் ஊடகங்களின் செயல்பாடுகள் மாநகராட்சி மன்றத்தின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மக்களிடையே கொண்டு செல்ல ஆற்றியுள்ள சேவையை மதிக்கிறோம். இதனால் மக்களின் நன்மதிப்பை எம்பிஎஸ்ஏ பெற்றுள்ளது. தகவல் ஊடகங்கள் எங்களின் சக வியூகப் பங்காளிகளாக செயல்பட்டு எம்பிஎஸ்ஏ மக்களின் பார்வைக்கு சிறந்த ஒரு சேவை தரம் வாய்ந்த மன்றமாக விளங்க முடியும். ஷா ஆலம் குடியிருப்பாளர்களுக்கு சரியான தகவல்கள், நிகழ்ச்சி விவரங்கள் மற்றும் திட்டங்கள் சேர்ந்தடைய தகவல் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியம்,” என்று கூறினார்.
2017-ம் ஆண்டுக்கான, கொண்கோட் தங்கும் விடுதியில் நடைபெற்ற தகவல் ஊடகங்களின் சேவை பாராட்டும் விழாவில் 80 பல்வேறு தகவல் ஊடகங்களின் நிருபர்கள் முன்னிலையில் பேசினார்.
இந்த நிகழ்வில் சிலாங்கூர் கினி மற்றும் இரண்டு தகவல் நிறுவனங்களோடு சிறந்த செய்தி வெளியிடும் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
=EZY=