ALAM SEKITAR & CUACANATIONALSELANGOR

சிலாங்கூரின் எட்டு மாவட்டங்களில் அடுத்த புதன் வரை இடியுடன் கூடிய அடைமழை பெய்யும்

ஷா ஆலம், நவ 26- சிலாங்கூர் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் இன்று தொடங்கி அடுத்த புதன் கிழமை வரை இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், கோல லங்காட், உலு லங்காட், கிள்ளான், சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் இந்த இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறை கூறியது.

பெட்டாலிங் மாவட்டத்தை பொறுத்தவரை நவம்பர் இறுதி வரை ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய அடைமழை பெய்யும். எனினும், டிசம்பர் முதல் இரு தினங்களில் மழை இருக்காது.

பொது மக்கள் வானிலை தொடர்பான மேல் விபரங்களை https:// www.met.gov.my/forecast/weather/district/Ds57 என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Pengarang :