கோலாலம்பூர், ஜன 16- நாட்டில் இன்று கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.029 ஆக உயர்வு கண்டது.
சிலாங்கூர் மாநிலம் 1,466 சம்பவங்களுடன் முதலிடம் வகிக்கும் வேளையில் 719 சம்பவங்களுடன் ஜோகூரும் 449 சம்பவங்களுடன் சபாவும் 347 சம்பவங்களுடன் கோலாலம்பூரும் 214 சம்பவங்களுடன் நெகிரி செம்பிலானும் உள்ளன. இன்று பதிவு செய்யப்பட்ட மரண எண்ணிக்கை எட்டு ஆகும்.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 155,095 ஆக உயர்வு கணடுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா
கூறினார்.
நோய்த் தொற்று தீவிரமாக உள்ளவர்களின் எண்ணிக்கை 37,126ஆக உள்ள வேளையில் 205 தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். 79 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
இன்று 2,148 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக கூறிய அவர், இதன் வழி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 117,375 ஆக உயர்ந்துள்ளது என்றார்.