NATIONAL

அஸ்மின்: நான் எங்கும் போட்டியிடத் தயார் !!!

புக்கிட் அந்தாராபங்சா, பிப்ரவரி 10:

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனது மக்கள் சேவையின் அடிப்படையில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று சூளுரைத்தார். சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றி வருவதால் எந்த தொகுதியிலும் போட்டியிட உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.

”  தேசிய ரீதியில் உள்ள ஒரு தலைவர், எந்த நேரத்திலும் நடக்கும் பொதுத் தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும். ஆனாலும், இறுதியில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களின் வெற்றியினாலும், கடவுளின் ஆசியினாலும் மக்கள் தொடர்ந்து சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை நிலைநிறுத்துவார்கள். நான் எங்கே போட்டியிடுவேன் என்பது முக்கியமல்ல. ஆனால் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வந்துள்ளோம் என்பது தான் முக்கியம். இதனையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்,” என்று யூகே பெர்டானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசினார்.

 

 

 

 

 

 

மேலும் கூறுகையில், தலைவர்கள்  அரசியல் மட்டும் செய்யாமல் மக்கள் மீதான பொறுப்பை மறந்து விட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மேலும், சிலாங்கூர் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி கட்சிகளிடையே நடந்து வரும் தொகுதி பங்கீடு சுமூகமாக தீர்த்து வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

#கு.குணசேகரன்


Pengarang :