SELANGOR

சுங்கை கன்டிஸ் தேர்தல் எந்திரம் மற்றும் தேர்தல் முதன்மை இயக்க அறையை சுஹாய்மி திறந்து வைத்தார்

கிள்ளான் , ஏப்ரல் 27:

நேற்றிரவு சுங்கை கன்டிஸ் தேர்தல் எந்திரம் மற்றும் தேர்தல் முதன்மை இயக்க அறையின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா எழுச்சிப் பொங்க நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார வாக்காளர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளர்களான சுஹாய்மி ஷாபியி (சுங்கை கன்டிஸ் சட்ட மன்றம்), அஸ்மிஸாம் ஸாமான்ஹூரி (போர்ட் கிள்ளான் ) மற்றும் கணபதி ராவ் (கோத்தா கெமுனிங்) ஆகியோர் உணர்ச்சிவச உரையாற்றி வருகையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

 

 

 

 

 

சுஹாய்மி, கெஅடிலான் கட்சியின் கொடியை சுங்கை கன்டிஸ் சட்ட மன்ற தேர்தல் இயக்குனர் ஹாஜி ஸப்ரி அமியிடம் ஒப்படைக்கப்பட்டவுடன் அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சி  தொடங்கி வைக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து , சுமார் பத்து கார்கள் சுங்கை கன்டிஸ் சட்ட மன்ற தொகுதியை சுற்றி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று கார்களின் ஊர்வலத்திற்கு கரக எழுப்பினார்கள்.


Pengarang :