கோலாலம்பூர்,மே11:
1எம்டிபி தொடர்பிலான அனைத்து பணமும் மீட்கப்படும் என துன் மகாதீர் கூறினார்.
அமெரிக்கா,சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் 1எம்டிபி பணம் மீட்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் கடன் வெ.800 பில்லியனை எட்டியுள்ள நிலையில் 1எம்டிபி பணத்தை மீட்க வேண்டியது அவசியமாகிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த 2015இல் நிதி அமைச்சு நாட்டின் கடன் மூன்று மடங்கு உயர்ந்து வெ.740 பில்லியனை எட்டியுள்ளதாக கூறியதை நினைவுக்கூர்ந்த துன் மகாதீர் நாட்டின் புதிய அரசாங்கம் சகல ஊழல்களையும் முறியடிக்கும் என்றார்.