NATIONAL

எஸ்பிஆர்எமின் புதிய ஆணையரை நாளை நியமனம் செய்யப்பட உள்ளது

கோலா லம்பூர் , மே 14:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்பிஆர்எம்) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஸூல்கிப்லி அமாட்-க்கு பதிலாக முதியவரை நாளை நியமனம் செய்யப்பட உள்ளதாக நாட்டின் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இந்த புதிய நியமனம் இதற்கு முன்பு நடந்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரணை நடத்த வழி வகுக்கும் என்று விவரித்தார்.

மேலும் கூறுகையில், நாட்டின் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அப்பெண்டி அலியை விடுமுறையில் செல்லுமாறு தாம் கட்டளையிட்டதாக துன் மகாதீர் முகமட் கூறினார். இந்த நடவடிக்கை கெஅடிலான் கட்சியின் தலைமை ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் விடுதலை முயற்சிகளை துரிதப்படுத்தவும் மற்றும் சில ஊழல் விசாரணை தொடர்பில் இவ்வாறு செய்யப்பட்டதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.


Pengarang :