NATIONAL

1எம்டிபி-யால் கடனை திருப்பி தர இயலாது !!!

1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) கடனை, அந்த நிறுவனத்தால் எதிர் வரும் மே 30-இல் திருப்பி தர இயலாது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். மேற்கண்ட தகவல்களை 1எம்டிபி நிறுவனத்தின் இயக்குனர்களான நோர்ஹாஸ்மான் ஆயோப், கமால் முகமட் அலி, தலைமை செயல் அதிகாரி அருள் கந்தசாமி, முன்னாள் தலைமை நிதி நிர்வாகி அஸ்மி தாஹீர் மற்றும் முன்னாள் நிறுவன வழக்கறிஞர் இவான் சென் ஆகியோரை சந்தித்த பிறகு வெளியிட்டுள்ளார்.

” 1எம்டிபி-யின் இயக்குனர், நிறுவனம் திவாலாகி விட்டது என்றும் கடனை திருப்பி செலுத்த முடியாது என்று உறுதி படுத்தி விட்டார். முன்னாள் தலைமை நிதி நிர்வாகி, அஸ்மி தாஹீர் நிதியமைச்சுக்கு மார்ச் மாதத்தில் எழுதிய கடிதத்தில் 1எம்டிபி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடனுக்கான வட்டியை திருப்பி தர இயலாது கூறியிருந்தார்,” என்று குவான் எங் கூறினார்.


Pengarang :