ஷா ஆலம், அக்.16-
ஃபுரோஸ்ட் அண்ட் சல்லிவன் உலக அலோசனை மன்றத்தின் 2019ஆம் ஆண்டு தென் கிழக்காசியாவின் புதிய விவேக நகர நிர்வாகத்திற்கான விருதை சிலாங்கூர் விவேக நிர்வாக பிரிவு (எஸ்எஸ்டியு) வென்றுள்ளது.
ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டத்தை சிறந்த முறையில் அமல்படுத்தும் இப்பிரிவுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாகும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஃபாஹ்மி ஙா கூறினார்.
“இது ஓர் எதிர்பாராத வெற்றியாகும். ஆயினும், இதுநாள் வரையில் ஸ்மார்ட் சிலாங்கூர் திட்டத்தை சிறந்த வகையில் நிர்வகித்து அமல்படுத்தி வரும் எங்களுக்கு சரியான தருணத்தில் ஓர் அங்கீகாரம்” என்றார் அவர்.
“மாநில அளவில் இத்திட்டத்திற்காக செய்யப்படும் செலவுகள் சிக்கனமாகவும் ஒரு காசு என்றாலும் அது வரையறுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றியே செலவிடப்படுகிறது” என்றும் அவர் சொன்னார்.