NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: 52,978 வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பட்டுள்ளன!

புத்ராஜெயா, அக்டோபர் 31:

தஞ்சோங் பியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த அக்டோபர் 16 தொடங்கி இத்தொகுதியைச் சேர்ந்த 52,978 வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பட்டதாக பொதுத் தேர்தல் ஆணையம்(எஸ்பிஆர்) தெரிவித்தது.

இந்த எண்ணிக்கையில் 52,698 பொது வாக்காளர்கள் மற்றும் 280 முன்கூட்டியே வாக்களிப்போரின் எண்ணிக்கையும் அடங்கும் என்று எஸ்பிஆர் ஆணையத் தலைவர் டத்தோ அஸார் அஸிஸான் ஹருண் கூறினார்.

“வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெற்றவர்கள் இடைத்தேர்தல் நடைபெறும் வேளையில் ஆணையத்தின் கூடாரத்தில் தங்கள் பெயரையும் வாக்காளர் பதிவு எண்ணையும் சோதனை செய்யத் தேவையில்லை. ஏனெனில் இவ்விரு விவரங்களும் அவ்வட்டைகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.
ஆயினும், வாக்களிக்கும் தினத்தனறு வாக்காளர்கள் தங்களின் அடையாள அட்டைகளை உடன் கொண்டு செல்வது அவசியமாகும் என்று அவர் நினைவுருத்தினார்.

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் விவரங்கள் ஆணையத்தின் அகப்பக்கத்தில் தேடி அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :