Suruhanjaya Pencegahan Rasuah Malaysia.
NATIONALRENCANA PILIHAN

எதிர்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சொத்துக்களை அறிவிக்காமல் உள்ளனர்

ஷா ஆலம், நவம்பர் 23:

மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த மாதம் கெடு முடிந்த பின்னரும் இன்னும் சொத்துக்களை அறிவிக்காமல் உள்ளனர் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் சம்சுல் பஹாரின் முகமட் ஜாமில் தமது தரப்பினர் தொடர்ந்து காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்ற சபாநாயகரிடம் சத்தியபிரமாணம் எடுத்த சொத்துக்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு முன், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக தேசிய முன்னணியினர் இன்னும் சொத்துக்களை அறிவிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 18 அன்று பொந்தியான் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அப்படி செய்ய மாட்டார்கள் என்றும் சட்டத்தில் இடமில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.


Pengarang :