காஜாங், பிப் 25- இங்குள்ள ஜாலான் சுங்கை சுவா, வின்னி பாளாசா பின்புறம் உள்ள கால்வாயை சீரமைக்கும் பணிகள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் முற்றுப்பெறும். திடீர் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் ஈராண்டுகளுக்கு முன்னர் தொடக்கக்பட்ட இத்திட்டம் தற்போது 90 விழுக்காட்டு வரை பூர்த்தியாகியுள்ளதாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார். கடுமையான மழையின் போது இப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கு இப்பகுதியே முக்கிய காரணமாக விளங்கியது. இந்த சீரமைப்பு பணிகள் காரணமாக தங்கு தடையின்றி சுங்கை லங்காட் நோக்கி செல்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர். சிலாங்கூர் மாநில வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையினால் மேற்கொள்ளப்பட்ட