ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசிய தடுப்பூசித்  திட்டத்தில் சிலாங்கூரைச் சேர்ந்த 16 லட்சம் பேர் பதிவு

ஷா ஆலம், மார்ச் 17-  தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் நேற்று வரை சிலாங்கூரைச் சேர்ந்த 16 லட்சத்து 68 ஆயிரத்து 544 பேர் பதிந்து கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் 57 லட்சத்து 42 ஆயிரத்து 572 பேர் இத்திட்டத்திற்கு தங்களைப் பதிந்து கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா டிவிட்டரில் கூறியுள்ளார்.

சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் ஜோகூரில் 7 லட்சத்து 32 ஆயிரத்து 516 பேர் இத்திட்டத்திற்கு பதிந்து கொண்டுள்ள வேளையில்  கோலாலம்பூரில் 5 லட்சத்து 16 ஆயிரத்து 956 பேரும் சரவாவில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 918 பேரும் பினாங்கில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 841 பேரும் பேராக்கில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 944 பேரும் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கெடா (288,837 பேர்), சபா (254,823 பேர்), நெகிரி செம்பிலான் (233,024 பேர்), பகாங் (219,796 பேர்), கிளந்தான் (151,580 பேர்), மலாக்கா (189,129 பேர்), திரங்கானு (142,145 பேர்), புத்ரா ஜெயா (40,559 பேர்), பெர்லிஸ் (35,456 பேர்), லபுவான் (19,504 பேர்) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.


Pengarang :