ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் நேற்று வரை 2.16 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோலாலம்பூர், ஆக3- தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று வரை நாட்டில் 2 கோடியே 16 லட்சத்து 68 ஆயிரத்து 999  டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி பணிகள் தொடர்பான விளக்கப் படத்தை தனது  தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா,  1 கோடியே 44 லட்சத்து 71 ஆயிரத்து 138 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 71 லட்சத்து 97 ஆயிரத்து 861 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர் என்று சொன்னார்.

நாட்டின் மக்கள் தொகையில் 44.3 விழுக்காட்டினர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 22 விழுக்காட்டினர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளதை இது காட்டுகிறது என்றார் அவர்.

நேற்று மொத்தம் 468,526 பேர் தடுப்பூசியை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Pengarang :