ரவாங், நவ 4- செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜின் தீபாவளி பொது உபசரிப்பு பண்டார் கன்றி ஹோம்சில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்த உபசரிப்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் சுமார் ஒரு மணி நேரத்தை செலவிட்ட மந்திரி புசார், தம்பதியர் விருந்தில் கலந்து கொண்டவர்களோடு அளவளாவியதோடு பிரியாணி, தோசை போன்ற பதார்த்தங்களையும் ருசித்து மகிழ்ந்தனர்.
மிதமான அளவில் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் முகக்கவசம் அணிவது, கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற எஸ்.ஒ.பி, விதிமுறைகளை கடைபிடிக்கப்பட்டன,
மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி, ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட், செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜீ கின் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்,