ECONOMYMEDIA STATEMENT

மின்னல் தாக்கி வீடு தீக்கிரையானது- ஏழு பூனைகள் கருகி மாண்டன

ஷா ஆலம், செப் 14-  மின்னல் தாக்கியதில் மூதாட்டி ஒருவருக்குச் சொந்தமான வீடு தீக்கிரையானது. இச்சம்பவம் கோல பெராங், கம்போங் புக்கிட் டிமானில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்தது.

தீமா@பரிடா மூசா என்ற அந்த மூதாட்டி வளர்த்து வந்த ஆறு பூனைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இச்சம்பவம் நிகழ்ந்தபோது அந்த மூதாட்டியும் அவரின் 27 வயது மகளான ஜஹிரா மாட் தாஸானும் வீட்டில் இல்லை.

மின்னல் தாக்கி வீடு தீப்பற்றி எரியும் சம்பவம் குறித்து அண்டை வீட்டுக்காரரிடமிருந்து தகவல் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தாம் வேலையிடத்திலிருந்து விரைந்து வந்ததாக ஜஹிரா தெரிவித்தார்.

இந்த தீச்சம்பவம் ஏற்பட்டபோது அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருந்ததாக கோல பெராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஹனாபி முகமது கூறினார்.

இச்சம்பவம் குறித்து பிற்பகல் 2.44 மணியளவில் தகவல் கிடைத்தது. 12 பேரடங்கிய தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :