ECONOMYMEDIA STATEMENTSUKANKINI

சுக்மா 2022- பெத்தாங் எஃகு பந்தெறியும் போட்டியில் சிலாங்கூருக்கு நான்காவது தங்கம்

ஷா ஆலம், செப் 18- கிள்ளான் பள்ளத்தாக்கில் தற்போது நடைபெற்று வரும் சுக்மா எனப்படும் மலேசிய விளையாட்டுப் போட்டியில் பெந்தாங் எனப்படும் எஃகு பந்தெறியும் ஆட்டத்தின் ஆண்கள் பிரிவில் சிலாங்கூர் மேலும் ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றது.

கோலாலம்பூர் பெந்தாங் அரங்கில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் சிலாங்கூரின் அய்ஷேக் ஃபிங்கான் தங்கப் பதக்கத்தை வென்ற வேளையில் மலாக்காவைச் சேர்ந்த கைருள் அமிருடிள் ஹிஷாம் வெள்ளிப் பதக்கத்தையும் கூட்டரசு பிரதேசத்தின் முகமது ஷியாமி முகமது நட்ஸ்ரி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதனிடையே, நீலாய் மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 50 மீட்டர் அம்பு எறிதல் போட்டியில் முகமது அய்மான் முகமது ஹஸ்ரி சிலாங்கூருக்கு மூன்றாவது தங்கத்தைப் பெற்றுத் தந்தார்.

மாநிலத்தின் இரண்டாவது தங்கப்பதக்கம் 75 கிலோவுக்கு கீழ்ப்பட்டோருக்கான குமித்தே பிரிவில் எம். கோகுல்நாத் மூலமாகவும் முதலாவது தங்கம் வூஸு விளையாட்டாளர் மேண்டி சிபில் சென் மூலமாகவும் கிடைத்தன.


Pengarang :