ECONOMYSELANGOR

தீபாவளி: ஹிஜ்ரா சிலாங்கூர் பஜார் வர்த்தகர்களுக்கு ஐ-பெர்மூசிம் கடன்களை வழங்குகிறது

ஷா ஆலம், செப்டம்பர் 29: தீபாவளி பஜாரில் பங்கேற்கும் வர்த்தகர்களுக்கு ஹிஜ்ரா சிலாங்கூர் ஐ-பெர்மூசிம் கடன்கள் வழங்கப்படும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

ஊராட்சி மன்றங்களில் இருந்து உரிமம் பெற்றவர்களுக்கு இந்த சலுகை திறந்திருக்கும் என்று ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

வணிக நடவடிக்கைகளை தொடங்குவதற்கு, உரிமம் பெற சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் (சித்தாம்) மூலம் அவர்களுக்கு உதவி செய்யப்படும்.

“சிலாங்கூரில் தீபாவளி பஜார் அமைப்பாளர்களுக்கு வணிக உரிமம் பெற அல்லது பஜாரை ஏற்பாடு செய்ய சித்தாம் தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. நகராண்மை மற்றும் மாநகர் மன்றங்களின்  அனுமதியுடன்   தீபாவளி பஜாரில் பங்கேற்கும் வர்த்தகர்களுக்கு ஹிஜ்ரா சிலாங்கூர் ஐ-பெர்மூசிம் கடன்கள் வழங்கப்படும்.

“தீபாவளி பஜார் ஏற்பாடு உரிம விண்ணப்பத்தை எளிதாக்குவதற்கும், சிறு தொழில் முனைவோருக்கு உதவுவதற்கான மூலோபாய ஒத்துழைப்புக்கான இடத்தைத் திறப்பதற்கும் சித்தாம் கவுன்சிலின் உரிமத் துறையுடன் இணைந்து பணியாற்றும்” என்று அவர் பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.

முன்னதாக, தீபாவளி பஜார் அல்லது ஊராட்சி மன்ற அளவில் தீபாவளி கார்னிவல் நடத்துவது குறித்து விவாதிக்க சிலாங்கூர் முழுவதும் உள்ள ஊராட்சி மன்ற உரிமத் துறையுடன் சித்தாம் சிலாங்கூர் சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.

கூட்டத்தில் சிலாங்கூர் முழுவதும் இருந்து கவுன்சிலின் உரிமம் வழங்கும் துறையின் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Pengarang :