ECONOMYHEALTHNATIONAL

கடந்த வாரம் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,533 ஆக அதிகரித்துள்ளது, மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்

கோலாலம்பூர், செப்டம்பர் 29: இந்த ஆண்டு செப்டம்பர் 18 முதல் 24 வரையிலான 38வது தொற்றுநோய் வாரத்தில் (எம்இ) டிங்கி காய்ச்சல் சம்பவங்கள், முந்தைய வாரத்தில் 1,363 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 12.5 விழுக்காடு அதிகரித்து 1,533 ஆக உள்ளது.

டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,084 ஆக உயர்ந்துள்ளது  என்று சுகாதாரப் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 13 இறப்புகளுடன் ஒப்பிடுகையில் டிங்கி சம்பவங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றார்.

சிலாங்கூர்(28), சபா (15), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா (ஐந்து) என மொத்தம் 48 ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அதிகரித்துள்ளது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

டாக்டர் நோர் ஹிஷாம் கூறுகையில், சிக்குன்குனியா சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை இன்று வரை 646 சம்பவங்களாக உள்ளது.

இதற்கிடையில், மழைக்காலம் வெப்பமான காலநிலையுடன் மாறி மாறி வருவதால் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற நிலை என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

எனவே, வீடுகளுக்கு அருகாமையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் காலி இடங்கள் போன்றவற்றில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய கொள்கலன்கள் குவியாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்துகிறார்.

“ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுவதற்கு சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேவைப்படும், மேலும் வறண்ட நிலையில் அதன்  முட்டைகள் எட்டு மாதங்கள் வரை உயிர் வாழும் .


Pengarang :