ஜகார்த்தா, அக் 2 - இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா வட்டாரத்தில் காற்பந்து விளையாட்டின்போது நிகழ்ந்த கலவரத்தில் 127 பேர் கொல்லப்பட்டனர். அரிமா கிளப் மற்றும் பெர்செபாயா சுராபாயா கால்பந்து குழுக்களிடையே நடைபெற்ற ஆட்டத்தின் போது இந்த கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் மேலும் 180 பேர் காயம் அடைந்ததாக இந்தோனேசிய போலீல் தலைவர் உறுதிப்படுத்தினார். லீக் காற்பந்து போட்டியின் ஆட்டத்தின்போது அரிமா கிளப் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அதன் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதிகமான ரசிகர்கள் திடலுக்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டதால் ரசாயன நீர் மற்றும் கண்ணீர் புகையும் பயன்படுத்தப்பட்டது. இதனிடையே இந்த கலவரம் குறித்து இந்தோனேசிய காற்பந்து சங்கம் விசாரணையை நடத்தி வருகிறது.