ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர்  அரசின் இந்திய இளைஞர்களை  தொழில் முனைவர்களாக்கும்  திட்டத்தில் மேலும் ஒருவர்,

கோலக்குபூ பாரு,  ஜன 17;-  உலு சிலாங்கூர்,  உலு பெர்ணம்  பகுதி இளைஞர் சசிகுமார் ஜெகநாதன்  என்ற  இளைஞருக்கு மாநில  ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கீழ் செயல்படும் சிலாங்கூர் ஐ-சீட் இன்னும்  இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மலேசிய வெள்ளி 4140 பெறுமானமுள்ள 2 முடிதிருத்தும்  நாற்காலிகளை வழங்கியது.

இந்த  உதவித்திட்டம் உலு பெர்ணம் இந்திய சமூகத் தலைவர் ஆனந்தன் மற்றும் உலு பெர்ணம்  பொங்குலுவின்  பரிந்துரையுடன்  உலு சிலாங்கூர் ஐ – சீட் வட்டார அதிகாரி தினேஸ் செல்வராஜூ மூலம் ஏற்பாடாகியுள்ளது சிலாங்கூர்இன்று அறிகிறது.

மாநிலம் முழுவதும்  ஏழ்மை நிலையில்  இருக்கும்  இந்தியர்களுக்கு பொருளாதாரத்தில் கைக் கொடுப்பதும் திறமையானவர்களை தொழில் துறைகளில் வளர்த்து விட கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற திட்டங்களை மாநிலம் முழுவதிலும்  ஐ-சீட் இன்னும்  இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அறிகிறது.


Pengarang :