ALAM SEKITAR & CUACAECONOMY

சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் நியமனம்

ஷா ஆலம், ஏப் 29- சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவர் முகமது பவுஸி முகமது யாத்திம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் வரும் மே மாதம் 2ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவராக கடந்த மூன்றாண்டுகள் பதவி வகித்து வந்த 56 வயதான பவுஸி, நேற்றுடன் அப்பதவியை நிறைவு செய்தார். 

பவுஸி இடமாற்றம் செய்யப்படுவதை முன்னிட்டு நகராண்மைக் கழக பணியாளர்கள் நேற்று அவருக்கு பிரியாவிடை நிகழ்வை நடத்தினர்.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் எங்களுக்கு வழங்கிய வழிகாட்டல்களுக்கும் அறிவாற்றலை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி கூறுகிறோம். உங்கள் பணி காலத்தில் மாவட்ட, தேசிய மற்றும் அனைத்துலக நிலையில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என்று அப்பணியாளர்கள் தங்கள் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளனர்.

மலேசிய விவசாயப் பல்கலைக்கழகத்தில் நில வள மேலாண்மைத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவரான பவுஸி கடந்த 2020ஆம் ஆண்டு முதல் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

திரங்கானுவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் இதற்கு முன்னர் சிப்பாங் நகராண்மைக் கழகத் தலைவராகவும் உலு சிலாங்கூர் மாவட்ட அதிகாரியாகவும் கோம்பாக் மாவட்ட துணை அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளார்.


Pengarang :