கோலாலம்பூர், மே 4- ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவான மிதமான நிலநடுக்கம் இன்று காலை 8.49 மணியளவில் பிலிப்பைன்ஸின் லூசான் நகரில் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸின் டுகுகேராவ் நகரில் இருந்து கிழக்கே 64 கிலோமீட்டர் தொலைவில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது. இருப்பினும், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.