ஷா ஆலம், மே 21- கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற மூன்று நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வுகளில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டார்.
கம்போங் சுங்கை துவா கிராமத் தலைவர் ஜூல்கிப்ளி ஹம்சா ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பொது உபசரிப்பில் சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர் நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் பங்கேற்றார்.
சுங்கை துவா பெர்கிம் அமைப்பு மற்றும் சுங்கை துவா பாரு கிராம மேம்பாட்டு நிர்வாகக் குழு கூட்டாக ஏற்பாடு செய்திருந்த அந்த விருந்து நிகழ்வில் நாற்பது நிமிடங்களைச் செலவிட்ட அமிருடின் அங்கிருந்த சுமார் 100 விருந்தினர்களுடன் அளவலாவி மகிழ்ந்தார்.
பின்னர் அவர் ஏயு1சி ருக்குன் தெத்தாங்கா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது உபசரிப்பு நிகழ்வுக்கு பிற்பகல் 1.40 மணியளவில் வருகை புரிந்து அங்கிருந்த சுமார் 100 வருகையாளர்களுடன் கலந்துரையாடினார்.
புசாக்கா ஹனிப் மலேசியா மற்றும் யாயாசான் உஸ்தாஸ் ஹனாபி அகமது ஏற்பாட்டில் உலு கிளாங்கில் உள்ள மலேசிய தேசிய திரைப்பட கழகத்தின் (பினாஸ்) தலைமையகத்தில் நடைபெற்ற பெருநாள் உபசரிப்பில் பிற்பகல் 2.10 மணியளவில் அமிருடின் பங்கேற்றார்.