செய்தி- மா. சிவகுமார்
கோல சிலாங்கூர் பெர்மாத்தாங் ஜூலை 5;- கோல சிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியின் பாக்காத்தான் ஹரப்பான் எண் : 09 பெர்மாத்தாங் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் முகமட் யாஹ்யா மட்ஷாரிக்கு ஆதரவாக நேற்று இரவு பெர்மாத்தாங் கில் உரை நிகழ்த்திய சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடன் பின் ஷாரி சிலாங்கூரின் சாதனைகளை எடுத்து முன் வைத்ததுடன், ஒற்றுமையான நம்பிக்கையான ஒரு நிலையான ஆட்சியே மாநிலத்தின் வெற்றிக்கு மூலக்காரணம் என்றார்
ஹரப்பான் வேட்பாளர் யாஹ்யா சாரிக்கு ஆதரவு பிரச்சாரத்தில் சிலாங்கூர் அரசாங்கம் கடந்த 5 – வருடமாக 89,000 -வேலை வாய்ப்புகளை மாநில மக்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிலாங்கூர் முக்கிய பங்களித்து வருகிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.
அதே சமயம் மலேசிய அரசியலில் புதிய வடிவமைப்பு உருவாக உள்ளது. அதுதான் மடாணி ஒற்றுமை அரசாங்கம் என்றார். இத் திட்டம் மக்களின் ஒருமைப்பாட்டிற்கு உருவாக்கப்பட்டது மட்டுமின்றி மக்களின் பொருளாதார சுமைகளை குறைப்பதும் ஏழ்மைக்கு விரைவில் தீர்வு காண்பதே முக்கிய இலக்கு என்றார்
இன்றைய மடாணி ஒற்றுமை அரசாங்கம், அரசாங்கத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மட்டுமின்றி மக்களுக்கும் பல சௌகரியங்களை வழங்கி வருகிறது. அவை பெருநாள் ஊக்க தொகையும் தந்துள்ளது. மக்களின் அடிப்படை ஊதிய உயர்வை வலியுறுத்தி வருவதுடன், முக்கிய உணவு பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பதை உறுதி செய்ய ரஹ்மா திட்டத்தினை அமல் படுத்தி வருகிறது.
சிலாங்கூர் அரசாங்கமும் பல மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் சேவையாற்றி வருகிறது. கோவிட் -19 -காலக்கட்டத்திலும் தடுப்பூசி, சோதனை கருவிகள் வாங்குவதற்கு, பாதுகாப்பு கவசங்கள் இன்னும் பல சுகாதார திட்டங்களின் வழி மக்கள் உடல் நலனுக்கு உதவி வருகிறது.