ECONOMYhealthMEDIA STATEMENTNATIONAL

ஒரு முஸ்லிமாக மதமாற்றம் கண்டாலும், மத நல்லிணக்கம் நன்றாகவும் உண்மையாகவும் இருக்கிறது

கோலா திரங்கானு, பிப்ரவரி 10 – ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடும் டத்தின் நோர்ஹானா அப்துல்லா  65 வயது  @ இங் சியூ பூவாய்  தனது, இணக்கமான கூட்டுக் குடும்பம், மலேசியாவில் உள்ள மதப் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு, அது ஒன்றாக வாழ, மகிழ்ச்சியை உருவாக்குவதற்கு ஒரு தடையல்ல என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது..

1984 இல் இஸ்லாத்தைத் தழுவியது மற்றும் அதே ஆண்டில் டத்தோ முகமட் அனுவார் எம்போங்குடனான அவரது திருமணம், ஹரி ராயா ஐடில்பித்ரி போன்ற மலாய் சமூகத்தால் பொதுவாக கொண்டாடப்படும் பண்டிகைகளைக் கொண்டாட அவரது சீனக் குடும்பத்திற்கும்  கதவுகளைத் திறந்தது.

ஏழு உடன் பிறந்தவர்களில் மூத்தவரான நோர்ஹானா, தனது இளைய உடன் பிறந்தவர்களில் இருவர் கிறிஸ்தவர்கள் என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குடும்பமாக கிறிஸ்துமஸ் கொண்டாடும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதாகவும் கூறினார். இருப்பினும், ஒரு முஸ்லிமாக, திரங்கானு சீன முஸ்லிம் சங்கத்தின் தலைவரான நோர்ஹானா, அவர்கள் செய்யும் அனைத்தும் ஷாரியா விதிகளுக்கு இணங்க, ஒரு முஸ்லிம் என்ற எல்லைக்குள் இருப்பதையும் உறுதி செய்வதாக கூறினார்.

“முன்பைப் போலவே, சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் எங்கள் குடும்பத்தில் கலகலப்பாக இருக்கிறது. 2004 இல் என் கணவர் இறந்த பிறகும், குடும்பத்தினர் என்னை ஒருபோதும் ஒதுக்கி வைக்கவில்லை,” என்று பெர்னாமா இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இப்பொருநாள் கொண்டாட்டத்தின் போது தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனது நான்கு பிள்ளைகளும் தேவைகளைப் புரிந்து கொண்டு இஸ்லாமியச் சட்டங்களைக் கடைப் பிடிப்பதில் காட்டிய உணர்வுக்காக நோர்ஹானா தனது நன்றியை தெரிவித்தார்.

“உதாரணமாக, இன்றிரவு மீண்டும் ஒன்று கூடும் இரவு உணவிற்கு, எனது உடன்பிறப்புகள் பாரம்பரிய சீன உணவை சமைப்பார்கள், ஆனால் , சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உட்பட பரிமாறப்படும் அனைத்து உணவுகளும் ஹலால் ஆகும். “நான் இஸ்லாத்தைத் தழுவியது முதல்  அதுதான் நடைமுறையாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மீறாத வரை, சீனப் புத்தாண்டை கொண்டாடுவது தவறில்லை என்று கூறும் ஃபத்வா அவர் கடைப்பிடிக்கிறார்.

“நான் கடைப்பிடிக்கும் ஒரு ஃபத்வாவும் உள்ளது, அது வீட்டை விளக்குகள் மற்றும் பலவற்றால் அலங்கரிக்க அனுமதிக்கிறது என்று கூறுகிறார்.

“மேலும், நான் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு குடும்ப உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நான் இஸ்லாத்தை தழுவினாலும் இன்னும் சீனராகவே இருக்கிறேன். இந்த பண்டிகையை நான் கொண்டாடுகிறேன், ஏனெனில் இது எனது கலாச்சாரம், என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


Pengarang :